Skip to main content

ظَهَرَ
பெருகி விட்டது
ٱلْفَسَادُ
பாவம்
فِى ٱلْبَرِّ
தரையில்
وَٱلْبَحْرِ
இன்னும் கடலில்
بِمَا كَسَبَتْ
செய்தவற்றினால்
أَيْدِى
கரங்கள்
ٱلنَّاسِ
மக்களின்
لِيُذِيقَهُم
இறுதியாக, அவர்களுக்கு சுவைக்க வைப்போம்
بَعْضَ
சிலவற்றை
ٱلَّذِى
எவை
عَمِلُوا۟
அவர்கள் செய்தனர்
لَعَلَّهُمْ يَرْجِعُونَ
அவர்கள் திரும்புவதற்காக

Zaharal fasaadu fil barri wal bahri bimaa kasabat aydinnaasi li yuzeeqahum ba'dal lazee 'amiloo la'allahum yarji'oon

மனிதர்களின் கைகள் தேடிக்கொண்டதன் காரணமாகக் கடலிலும் தரையிலும் அழிவு வேலைகள் (அதிகமாகப்) பரவி விட்டன. அதிலிருந்து அவர்கள் விலகிக் கொள்வதற்காக, அவர்களின் தீய செயல்களில் சிலவற்றின் தண்டனையை அவர்கள் (இம்மையிலும்) சுவைக்கும்படி அவன் செய்ய வேண்டியதாகிறது.

Tafseer

قُلْ
கூறுவீராக!
سِيرُوا۟
பயணியுங்கள்
فِى ٱلْأَرْضِ
பூமியில்
فَٱنظُرُوا۟
பாருங்கள்
كَيْفَ
எப்படி
كَانَ
இருந்தது
عَٰقِبَةُ
முடிவு
ٱلَّذِينَ
எவர்கள்
مِن قَبْلُۚ
முன்னர்
كَانَ
இருந்தனர்
أَكْثَرُهُم
அதிகமானவர்கள் அவர்களில்
مُّشْرِكِينَ
இணை வைப்பவர்களாக

Qul seeroo fil ardi fanzuroo kaifa kaana 'aaqibatul lazeena min qabl; kaana aksaruhum mushrikeen

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: பூமியில் நீங்கள் சுற்றித் திரிந்து பாருங்கள். உங்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு என்னாயிற்று? முன்னிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இணைவைத்து வணங்குபவர்களாகவே இருந்தனர்.

Tafseer

فَأَقِمْ
ஆகவே நிறுத்துவீராக!
وَجْهَكَ
உம் முகத்தை
لِلدِّينِ
மார்க்கத்தின் பக்கம்
ٱلْقَيِّمِ
நேரான
مِن قَبْلِ
முன்னர்
أَن يَأْتِىَ
வருவதற்கு
يَوْمٌ
ஒரு நாள்
لَّا مَرَدَّ
தடுக்க முடியாத
لَهُۥ
அதை
مِنَ ٱللَّهِۖ
அல்லாஹ்விடமிருந்து
يَوْمَئِذٍ
அந்நாளில்
يَصَّدَّعُونَ
பிரிந்து விடுவார்கள்

Fa aqim wajhaka lid deenil qaiyimi min qabli any yaatiya Yawmul laa maradda lahoo minal laahi Yawma'iziny yassadda'oon

ஆகவே, (நபியே!) அல்லாஹ்விடமிருந்து தப்பித்துக் கொள்ள முடியாத ஒரு நாள் வருவதற்கு முன்னதாகவே நீங்கள் உங்களுடைய முகத்தை நிலையான மார்க்கத்தளவில் திருப்பி விடுங்கள். அந்நாளில் (நல்லவர்களும், தீயவர்களும்) வெவ்வேறாகப் பிரிந்து விடுவார்கள்.

Tafseer

مَن
யார்
كَفَرَ
நிராகரிப்பாரோ
فَعَلَيْهِ
அவர் மீதுதான் கேடாக முடியும்
كُفْرُهُۥۖ
அவருடைய நிராகரிப்பு
وَمَنْ
எவர்கள்
عَمِلَ
செய்வார்களோ
صَٰلِحًا
நன்மை
فَلِأَنفُسِهِمْ
தங்களுக்குத்தான்
يَمْهَدُونَ
விரித்துக் கொள்கிறார்கள்

Man kafara fa'alaihi kufruhoo wa man 'amila saalihan fali anfusihim yamhadoon

எவன் நிராகரிப்பவனாக இருக்கிறானோ அவனுடைய நிராகரிப்பு அவனுக்கே கேடாக முடியும். எவர் நற்காரியங்களைச் செய்கின்றாரோ அவர் (அதனை மறுமையில்) தனக்கு நன்மையாகவே அமைத்துக் கொள்கிறார்.

Tafseer

لِيَجْزِىَ
இறுதியாக, கூலி கொடுப்பான்
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கைகொண்டனர்
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
مِن فَضْلِهِۦٓۚ
தன் அருளிலிருந்து
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
لَا يُحِبُّ
நேசிக்க மாட்டான்
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களை

Li yajziyal lazeena aamanoo wa 'amilus saalihaati min fadlih; innahoo laa yuhibbul kaafireen

நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களுக்கே அவன் (அல்லாஹ்) தன் அருளைக் கூலியாகக் கொடுக்கிறான். ஏனென்றால், நிச்சயமாக அவன் நிராகரிப்பவர்களை நேசிப்பதில்லை.

Tafseer

وَمِنْ ءَايَٰتِهِۦٓ
இன்னும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான்
أَن يُرْسِلَ
அவன் அனுப்புவது
ٱلرِّيَاحَ
காற்றுகளை
مُبَشِّرَٰتٍ
நற்செய்தி தரக்கூடியவையாக
وَلِيُذِيقَكُم
அவன் உங்களுக்கு சுவைக்க வைப்பதற்கும்
مِّن رَّحْمَتِهِۦ
தனது அருளை
وَلِتَجْرِىَ
செல்வதற்கும்
ٱلْفُلْكُ
கப்பல்கள்
بِأَمْرِهِۦ
அவனுடைய கட்டளையின் படி
وَلِتَبْتَغُوا۟
நீங்கள் தேடுவதற்கும்
مِن فَضْلِهِۦ
அவனது அருளிலிருந்து
وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
நீங்கள் நன்றி செலுத்துவதற்கும்

Wa min Aayaatiheee anyyursilar riyaaha mubashshi raatinw wa li yuzeeqakum mir rahmatihee wa litajriyal fulku bi amrihee wa litabtaghoo min fadlihee wa la'allakum tashkuroon

(மழைக்கு முன்னர் குளிர்ந்த) காற்றை நற்செய்தியாக அவன் அனுப்பி வைப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றே. (அதைக் கொண்டு) அவன் தன் அருளை (மழையை) நீங்கள் சுவைக்கும்படிச் செய்து, கப்பல்களையும் அவன் தன் கட்டளையைக் கொண்டே செல்லும்படிச் செய்கிறான். அதனால் (பல தீவுகளில் உள்ள) அவனுடைய அருளை நீங்கள் தேடிக்கொள்கிறீர்கள். (இவைகளுக்காக) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
أَرْسَلْنَا
நாம் அனுப்பினோம்
مِن قَبْلِكَ
உமக்கு முன்னர்
رُسُلًا
பல தூதர்களை
إِلَىٰ قَوْمِهِمْ
அவர்களுடைய மக்களுக்கு
فَجَآءُوهُم
அவர்கள் வந்தனர் அவர்களிடம்
بِٱلْبَيِّنَٰتِ
தெளிவான அத்தாட்சிகளுடன்
فَٱنتَقَمْنَا
ஆகவே, நாம் பழிவாங்கினோம்
مِنَ ٱلَّذِينَ
குற்றமிழைத்தவர்களிடம்
وَكَانَ
இருக்கிறது
حَقًّا
கடமையாக
عَلَيْنَا
நம்மீது
نَصْرُ
உதவுவது
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கை கொண்டவர்களுக்கு

Wa laqad arsalnaa min qablika Rusulan ilaa qawmihim fajaaa'oohum bil baiyinaati fantaqamnaa minal lazeena ajramoo wa kaana haqqan 'alainaa nasrul mu'mineen

(நபியே!) நிச்சயமாக நாம் உங்களுக்கு முன்னரும் பல தூதர்களை அந்தந்த மக்களிடம் அனுப்பி வைத்தோம். அவர்களும் தெளிவான அத்தாட்சிகளையே அவர்களிடம் கொண்டு வந்தனர். (எனினும், அவற்றை அவர்கள் நிராகரித்து விட்டனர்.) ஆகவே, (அவற்றை நிராகரித்த) குற்றவாளிகளை நாம் பழிவாங்கினோம். (ஏனென்றால் இவ்வாறு பழிவாங்கி) நம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்வது நம்மீது கடமையாகிவிட்டது.

Tafseer

ٱللَّهُ ٱلَّذِى
அல்லாஹ்தான்
يُرْسِلُ
அனுப்புகின்றான்.
ٱلرِّيَٰحَ
காற்றுகளை
فَتُثِيرُ
அவை கிளப்புகின்றன
سَحَابًا
மேகங்களை
فَيَبْسُطُهُۥ
அவன் அவற்றை பரப்புகின்றான்
فِى ٱلسَّمَآءِ
வானத்தில்
كَيْفَ يَشَآءُ
தான் நாடியவாறு
وَيَجْعَلُهُۥ
அவற்றை அவன் மாற்றுகின்றான்
كِسَفًا
பல துண்டுகளாக
فَتَرَى
ஆகவே நீர் பார்க்கிறீர்
ٱلْوَدْقَ
மழையை
يَخْرُجُ
அது வெளியேறக்கூடியதாக
مِنْ خِلَٰلِهِۦۖ
அவற்றுக்கு இடையிலிருந்து
فَإِذَآ أَصَابَ
அவன் அடையச் செய்தால்
بِهِۦ
அதை
مَن يَشَآءُ
தான் நாடியவர்களுக்கு
مِنْ عِبَادِهِۦٓ
தனது அடியார்களில்
إِذَا هُمْ
அப்போது அவர்கள்
يَسْتَبْشِرُونَ
மகிழ்ச்சியடைகிறார்கள்

Allaahul lazee yursilur riyaaha fatuseeru sahaaban fa yabsutuhoo fis samaaa'i kaifa yashaaa'u wa yaj'aluhoo kisafan fataral wadqa yakhruju min khilaalihee fa izaaa asaaba bihee mai yashaaa'u min 'ibaadiheee izaa hum yastabshiroon

அல்லாஹ்தான் காற்றை அனுப்பி வைக்கிறான். அது மேகத்தை ஓட்டுகின்றது. அவன் விரும்பியவாறு அதனை வானத்தில் திட்டுத் திட்டாகப் பரப்பிவிடுகிறான். அதிலிருந்து மழை பொழிவதை (நபியே!) நீங்கள் காண்கிறீர்கள். தன் அடியார்களில் அவன் விரும்பியவர்களை அம்மழை வந்தடையும் பட்சத்தில் அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

Tafseer

وَإِن كَانُوا۟
நிச்சயமாக அவர்கள் இருந்தனர்
مِن قَبْلِ
முன்னர்
أَن يُنَزَّلَ
இறக்கப்படுவதற்கு
عَلَيْهِم
அவர்கள் மீது
مِّن قَبْلِهِۦ
இதற்கு முன்னர்
لَمُبْلِسِينَ
நிராசையடைந்தவர்களாக

Wa in kaanoo min qabli any yunazzala 'alaihim min qablihee lamubliseen

அதற்கு முன்னர் அவர்கள் தங்கள் மீது மழை பொழியும் என்ற நம்பிக்கையை முற்றிலும் இழந்தவர்களாகவே இருந்தனர்.

Tafseer

فَٱنظُرْ
ஆக, பார்ப்பீராக!
إِلَىٰٓ ءَاثَٰرِ
அடையாளங்களை
رَحْمَتِ
அருளின்
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
كَيْفَ
எப்படி
يُحْىِ
அவன் உயிர்ப்பிக்கின்றான்
ٱلْأَرْضَ
பூமியை
بَعْدَ
பின்னர்
مَوْتِهَآۚ
அது மரணித்த
إِنَّ
நிச்சயமாக
ذَٰلِكَ
அவன்தான்
لَمُحْىِ
உயிர்ப்பிப்பவன்
ٱلْمَوْتَىٰۖ
இறந்தவர்களையும்
وَهُوَ
அவன்
عَلَىٰ
மீது(ம்)
كُلِّ
எல்லா
شَىْءٍ
பொருள்கள்
قَدِيرٌ
பேராற்றலுடையவன்

Fanzur ilaaa aasaari rahmatil laahi kaifa yuhyil arda ba'da mawtihaa; inna zaalika lamuhyil mawtaa wa Huwa 'alaa kulli shai'in Qadeer

(நபியே!) அல்லாஹ்வின் இவ்வருளால் ஏற்படும் பலன்களை நீங்கள் கவனியுங்கள்! இறந்துபோன பூமியை எவ்வாறு செழிக்கச் செய்கிறான்! (இவ்வாறே) நிச்சயமாக அவன் இறந்தவர்களையும் உயிர்ப்பிக்கச் செய்வான். அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உடையவன்.

Tafseer