Skip to main content

خَٰلِدِينَ
அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்
فِيهِۖ
அதில்
وَسَآءَ
மிகக் கெட்டது
لَهُمْ
அவர்களுக்கு
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
حِمْلًا
சுமையால்

Khaalideena feehi wa saaa'a lahum Yawmal Qiyaamati himlaa

அதில் அவன் எந்நாளும் (அதனைச் சுமந்து கொண்டே) இருப்பான். மறுமை நாளில் அவர்கள் சுமக்கும் இச்சுமை மிகக் கெட்டது.

Tafseer

يَوْمَ
நாளில்
يُنفَخُ
ஊதப்படும்
فِى ٱلصُّورِۚ
சூரில்
وَنَحْشُرُ
நாம் எழுப்புவோம்
ٱلْمُجْرِمِينَ
பாவிகளை
يَوْمَئِذٍ
அந்நாளில்
زُرْقًا
கண்கள் நீலமானவர்களாக

Yawma yunfakhu fissoori wa nahshurul mujrimeena Yawma 'izin zurqaa

எக்காளம் (சூர்) ஊதப்பட்டு குற்றவாளிகளை நாம் ஒன்று சேர்க்கும் நாளில் (பயத்தினால்) அவர்களுடைய கண்கள் நீலம் பூத்திருக்கும்.

Tafseer

يَتَخَٰفَتُونَ
அவர்கள் மெதுவாகப் பேசிக் கொள்வார்கள்
بَيْنَهُمْ
தங்களுக்கு மத்தியில்
إِن لَّبِثْتُمْ
நீங்கள் தங்கவில்லை
إِلَّا
தவிர
عَشْرًا
பத்து நாட்களே

Yatakhaafatoona bainahum il labistum illaa 'ashraa

அவர்கள் தங்களுக்குள் மெதுவாக(ப் பேசி) "நீங்கள் ஒரு பத்து (நாள்களு)க்கு அதிகமாக (உலகத்தில்) தங்கவில்லை" (என்று கூறுவார்கள்).

Tafseer

نَّحْنُ
நாம்
أَعْلَمُ
நன்கறிந்தவர்கள்
بِمَا يَقُولُونَ
அவர்கள் பேசுவதை
إِذْ يَقُولُ
கூறும் போது
أَمْثَلُهُمْ
முழுமையானவர்/அவர்களில்
طَرِيقَةً
அறிவால்
إِن لَّبِثْتُمْ
நீங்கள் தங்கவில்லை
إِلَّا
தவிர
يَوْمًا
ஒரு நாளே

nahnu a'lamu bimaa yaqooloona iz yaqoolu amsaluhum tareeqatan illabistum illaa yawmaa

அவர்கள் என்ன பேசிக் கொள்வார்கள் என்பதை நாம் நன்கறிவோம். அவர்களில் மிக்க ஞானமுள்ளோன் (என்று கருதப்படுபவன் அவர்களை நோக்கி) "ஒரு நாளேயன்றி நீங்கள் தங்கவில்லை" என்று கூறுவான்.

Tafseer

وَيَسْـَٔلُونَكَ
உம்மிடம் கேட்கிறார்கள்
عَنِ ٱلْجِبَالِ
மலைகளைப் பற்றி
فَقُلْ
நீர் கூறுவீராக
يَنسِفُهَا
அவற்றை தூளாக ஆக்கி விடுவான்
رَبِّى
என் இறைவன்
نَسْفًا
தூள்

Wa yas'aloonaka 'anil jibaali faqul yansifuhaa Rabbee nasfaa

(நபியே!) உங்களிடம் அவர்கள் மலைகளைப் பற்றி (அதன் கதி உலக முடிவின்போது என்னவாகும் என)க் கேட்கிறார்கள். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "என் இறைவன் அவைகளைத் தூள் தூளாக்கி(ப் பரப்பி) விடுவான்.

Tafseer

فَيَذَرُهَا
இன்னும் அவற்றை விட்டுவிடுவான்
قَاعًا
சமமான
صَفْصَفًا
பூமியாக

Fa yazaruhaa qaa'an safsafaa

பூமியை சமமான வெட்டவெளியாக்கி விடுவான்.

Tafseer

لَّا تَرَىٰ
நீர் காணமாட்டீர்
فِيهَا
அவற்றில்
عِوَجًا
கோணலை
وَلَآ أَمْتًا
இன்னும் வளைவை

Laa taraa feehaa 'iwajanw wa laaa amtaa

அதில் ஒரு சிறிதும் மேடு பள்ளத்தை நீங்கள் காணமாட்டீர்கள்.

Tafseer

يَوْمَئِذٍ
அந்நாளில்
يَتَّبِعُونَ
பின் தொடர்வார்கள்
ٱلدَّاعِىَ
அழைப்பாளரை
لَا عِوَجَ
திரும்ப முடியாது
لَهُۥۖ
அவரை விட்டு
وَخَشَعَتِ
இன்னும் அமைதியாகிவிடும்
ٱلْأَصْوَاتُ
சப்தங்கள் எல்லாம்
لِلرَّحْمَٰنِ
ரஹ்மானுக்கு முன்
فَلَا تَسْمَعُ
செவிமடுக்க மாட்டீர்
إِلَّا
தவிர
هَمْسًا
மென்மையான சப்தத்தைத்

Yawma iziny yattabi'oonad daa'iya laa 'iwaja lahoo wa khasha'atil aswaatu lir Rahmaani falaa tasma'u illaa hamsaa

அந்நாளில் (அனைவரும் எக்காள மூலம்) அழைப்பவனின் சப்தத்தையே பின்பற்றிச் செல்வார்கள். அதில் தவறு ஏற்படாது. ரஹ்மானுக்குப் பயந்து எல்லாச் சப்தங்களும் தணிந்து விடும். (மெதுவான) காலடி சப்தத்தைத் தவிர (வேறு எதனையும்) நீங்கள் கேட்கமாட்டீர்கள்.

Tafseer

يَوْمَئِذٍ
அந்நாளில்
لَّا تَنفَعُ
பலனளிக்காது
ٱلشَّفَٰعَةُ
பரிந்துரை
إِلَّا
தவிர
مَنْ
எவர்
أَذِنَ
அனுமதித்தான்
لَهُ
எவருக்கு
ٱلرَّحْمَٰنُ
பேரருளாளன்
وَرَضِىَ
இன்னும் அவன் விரும்பினான்
لَهُۥ
அவருடைய
قَوْلًا
பேச்சை

Yawma 'izil laa tanfa'ush shafaa'atu illaa man azina lahur Rahmaanu wa radiya lahoo qawlaa

அந்நாளில் ரஹ்மான் எவருக்கு அனுமதி அளித்து அவரின் பேச்சைக் கேட்க அவன் விரும்பினானோ அவரைத் தவிர மற்றெவருடைய சிபாரிசும் பயனளிக்காது.

Tafseer

يَعْلَمُ
அவன் நன்கறிவான்
مَا بَيْنَ
உள்ளதையும்
أَيْدِيهِمْ
அவர்களுக்கு முன்
وَمَا خَلْفَهُمْ
இன்னும் அவர்களுக்குப் பின்
وَلَا يُحِيطُونَ
அவர்கள் சூழ்ந்தறிய மாட்டார்கள்
بِهِۦ
அவனை
عِلْمًا
அறிவால்

Ya'lamu maa bainaa aideehim wa maa khalfahum wa laa yauheetoona bihee 'ilmaa

அவர்களுக்கு முன்னுள்ளதையும் பின்னுள்ளதையும் அவன் நன்கறிவான். எனினும், அவர்கள் அவனை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது.

Tafseer